சீனாவில் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், தற்போது இத்தாலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய 3 நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 151 ஆக இருந்தது. தற்போதைய நிலவரப்படி 166 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 141 இந்தியர்கள், 25 பேர் வெளிநாட்டினர். கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது